சிம்புவின் படபிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்தால் சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகை.!

ஒரு காலகட்டத்தில் சிம்பு என்றாலே வம்பு என்று கூறுமளவிற்கு சிம்புவின் சேட்டை அதிகமாக இருந்தது. சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆரம்ப காலத்தில் நல்ல நடித்து வந்த இவர் இடைப்பட்ட காலத்தில் மக்கள் பலரும் குற்றம்சாட்டும் படி நடந்து கொண்டார் அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என பெரும் குற்றச்சாட்டு இருந்தது.

அது மட்டுமில்லாமல் சிம்புவின் உடல் எடை அதிகரித்தல் சரியாக நடனமாட முடியவில்லை எனவும் பலரும் கேலி செய்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சிம்பு தனது உடல் எடையை குறைத்து கனகச்சிதமாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதற்குமுன் நடித்த மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்பு படபிடிப்பில் நடந்த கசப்பான அனுபவம் தான் நான் சினிமாவை விட்டே விலகியதற்கு காரணம் என சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கெட்டவன் என்ற திரைப்படம் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது  திடீரென அந்த திரைப்படம் கைவிடப்பட்டது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இடையே படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவங்களால் நான் தமிழ் சினிமாவை விட்டு விலகியதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்.

இவர் தமிழில் ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் சிம்புவின் கெட்டவன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

leka waishingdan
leka waishingdan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment