ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெய்லார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகிக்கெண்டே இருக்கும் நிலையில் தற்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், யோகி பாபு, தமன்னா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் நிலையில் இருக்கிறது இத்தனை தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் குறித்து அப்டேட் நாளை வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் சிம்பு அவர்கள் அடுத்ததாக ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். தேசிங்கு பெரியசாமி. இந்த படம் வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த ரஜினி தேசிங்கு பெரியசாமிக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

இதனால் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஜெய்லார் திரைப்படத்தை அடுத்து ரஜினியை வைத்து ஞானவேல் அவர்கள் இயக்கு இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ரஜினிக்காக கதை எழுதி காத்துக் கொண்டிருந்த தேசிங்கு பெரியசாமிக்கு ஏமாற்றம்தான் கிடைத்ததாக கூறப்படுகிறது அதனால் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் சிம்புவை வைத்து இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் இந்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment