பத்து தல திரைப்படம் வெளியான உடனே சிம்புவிற்கு திருமணம்.! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்த நிலையில் இதற்கு முன்பாக பத்து தல திரைப்படத்திலிருந்து வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் பத்து தல படத்தில் இடம் பெற்ற ஐட்டம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு நடிகை சாயிஷா அவர்கள் நடனமாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பத்து தல படக்குழுவினர் அனைவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுவருந்தனர்.

அப்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல நடிகர் மற்றும் நடிகைகள் பட குழுவினர் என பலரும் தங்களுடைய சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைக்கதை எழுத்தாளர் எதிர்பாராத விதமாக ஒரு தகவலை கூறி இருக்கிறார். இதனை கேட்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

அதாவது கிருஷ்ணாவுடன் பணிபுரிந்த பிறகு பலரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சூர்யா, ஜோதிகா, ஆரி ,கௌதம் கார்த்திக், என பலரும் கிருஷ்ணா உடன் பணியாற்றிய பிறகு திருமணம் செய்து கொண்டார்கள் என்று பொறி வைத்து கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அனைவரும் சிம்புவை நோக்கி திரும்பவே தனக்கு உரிய பாணியில் நடிகர் சிம்பு அவர்கள் இதெல்லாம் முன்னாடியே சொல்லக்கூடாதா என்று நகைச்சுவையாக கூறிவிட்டார். இதனால் நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்ய போகிறார் என்று கூறிவருகிறார்கள்.

விரைவில் நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அவருடைய அப்பாவான டி ராஜேந்திரன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகையால் நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version