ஆர்யா தான் ஃபர்ஸ்ட்..! ஆனா சிம்பு கொடுத்ததை என்னால ஒரு நாளும் மறக்கவே முடியாது..! நடிகை நயன்தாரா ஓப்பன் டாக்..!

simbu first aarya second nayanthara open talk: சினிமாவில் பிரபல நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.  இவர் திரைப்படத்தில் பிரபலமாக இருந்தாலும் பல்வேறு சர்ச்சையிலும் சிக்கி தவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு இன்னல்களை சந்தித்த நடிகை நயன்தாரா சமீபத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் வாய் திறக்கக் கூட யோசிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா பிரியாணி பற்றி பேசியுள்ளார் அதில் ஆர்யா எனக்கு கொடுத்த பிரியாணியை விட சிம்பு கொடுத்த பிரியாணி தான் மிகவும் அற்புதமாக இருந்தது என கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா ஆர்யாவுடன் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி ஒத்துப் போனது மட்டுமல்லாமல் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகை நயன்தாராவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆர்யா பிரியாணி செய்து அசத்தியுள்ளாராம்.

இதை தொடர்ந்து நயனிடம் சிம்பு மற்றும் ஆர்யா இவர்களுடைய பிரியாணிகளில் உங்களுக்கு பிடித்தது எது என கேள்வியை எழுப்பி உள்ளார்கள் அதற்கு பதிலளித்த நயன்தாரா ஆர்யாதான் எனக்கு பிரியாணி ஃபர்ஸ்ட் கொடுத்தார் ஆனால் சிம்புவின் பிரியாணி ஒரு நாளும் என்னால் மறக்க முடியாத அளவிற்கு உள்ளது.

இவ்வாறு நடிகை நயன்தாரா கூறியது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

nayanthara
nayanthara

Leave a Comment