நாசுக்காக தனுஷை வம்புக்கு இழுத்த சிம்பு.! சைலண்டாக போட்டுத்தாக்கும் தனுஷ்.!

சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் போட்டி போடுவது இயல்புதான் அந்த வகையில் ரஜினி கமல், விஜய் அஜித் ரசிகர்கள் மத்தியில் போட்டியாக பார்க்கப்படும் நடிகர்கள் சிம்பு மட்டும் தனுஷ் தான்.  இவர்கள் சொந்த வாழ்க்கை ரீதியாக நட்புடன் இருந்தாலும் தொழில்ரீதியாக போட்டி இருந்துகொண்டே தான் இருக்கிறது.

அதிலும் சொல்லப்போனால் அஜித் விஜய் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனால் தொழில் ரீதியாக சொல்லவா வேண்டும். அந்த வகையில் சிம்பு ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தாவர் ஆனால் இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை கொடுத்ததால் சினிமா வாழ்க்கையே  கேள்வி குறியாக மாறியது.

அதையெல்லாம் தவிர்த்து தற்பொழுது தான் உண்டு தன் வேலை உண்டு என அடுத்தடுத்து திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  அந்த வகையில் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இடைப் பட்ட காலத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்தார் அந்த திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியது.

simbu
simbu

ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் நாங்க நண்பர்கள்தான் என மேடைகளில் கூறிக் கொண்டாலும் உள்ளுக்குள் வஞ்சகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் தனுஷை சீண்டும் விதத்தில் வசனம் இருந்திருக்கும்.  அதிலும் அந்த வசனம் தேவை இல்லாத இடத்தில் கதைக்கு தேவையில்லாத இடத்தில் வைத்திருக்கும் படி அமைந்துள்ளது. அதாவது நீ அழிக்க வந்த அசுரன் நா. நா காக்க வந்த ஈஸ்வரன் என தேவையில்லாமல் பஞ்ச் பேசி இருப்பார்.

இந்த வசனம் தனுஷ் காதுக்குப் போனது தனுஷ் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அனைவரும் கூறினார்கள் ஆனால் சத்தமே இல்லாமல் சில சம்பவத்தை செய்துள்ளார் சிம்புவுக்கு தன்னுடைய சமூக வலைதளத்தில் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.  இதுவரை ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் என்ற பெயருக்கு பக்கத்தில் எந்த ஒரு அடைமொழியும் இல்லாமல் நடிகர் என்ற அடைமொழி தான் இருந்தது ஆனால் தற்போது சிம்பு தேவையில்லாமல் பேசியதால் டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் அசுரன் நடிகர் என மாற்றியுள்ளார்.

இது இரு தரப்பு ரசிகர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

dhanush-twitter
dhanush-twitter
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment