தூக்கிவிட்டவர்களுக்கு துரோகம் செய்யும் சிம்பு.! மன கஷ்டத்தில் இருக்கும் பத்து தல படக்குழு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து கொண்டு வருவதால் இவருக்கு என்ன தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டுமல்லாமல் தனது தந்தை இயக்கத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான சிம்பு சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து உள்ளார்.

இதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சிம்பு அவர்கள் இடையில் உடல் எடை அதிகரித்ததால் சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் போனது அது மட்டுமல்லாமல் கிடைக்கும் படங்களும் சரியாக ஓடவில்லை இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என்று நினைத்தபோது ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது தான் மாநாடு.

இந்தத் திரைப்படம் நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து கனிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வாசூலிலும் நல்ல லாபம் பார்த்து வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் தூக்கிவிட்டவனுக்கு துரோகம் செய்யும் வகையில் நடிகர் சிம்பு அவர்கள் நடந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது பத்து தள திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் குறுகிய காலங்கள் இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பாங்காங் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிம்பு அவர்கள் பாங்காங் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பத்து தல படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பட குழு சிம்பு இல்லாமல் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை வெளியிட்டது தான் என்று கூறப்படுகிறது அதை மனதில் வைத்துக் கொண்டுதான் நடிகர் சிம்பு அவர்கள் பத்து தல படத்தின் டப்பிங் பணிக்கு வர முடியாது என்று மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version