முத்த காட்சிகளை தவிர்க்கும் நடிகர் சிம்பு..! அதற்கு யார் காரணம் தெரியுமா.?

நடிகர் சிம்பு தனது திரை பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஆனால் தற்பொழுது ஒரு சில விஷயங்களை மாற்றிக் கொண்டுள்ளார் அந்த வகையில் நடிகர் சிம்பு தற்போது கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் கொடுக்கிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பஞ்ச் டயலாக், கையை நீட்டி அப்படி இப்படி பேசுவது மற்றும் முத்த காட்சிகள் படத்திலிருந்து ஆக வேண்டும் என சிம்பு பிடிவாதம் பிடித்த காலமெல்லாம் உண்டு ஆனால் தற்பொழுது அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். அவரது படங்களில் தற்போது தேவையில்லாமல் பஞ்ச் டயலாக் இருப்பதில்லை..

மேலும்  ஓவராக படத்தில் சீன் போடும் காட்சிகள் எதுவும் இருக்காது. அதுபோல தற்போது ஒரு புதிய முடிவையும் எடுத்துள்ளார். அதாவது இனி தனது படங்களில் முத்த காட்சிகள்  இடம் பெறக் கூடாது அப்படியே இருந்தாலும் அதை எடுத்து விட வேண்டும் அது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாராம் இந்த பிடிவாதத்திற்கு முக்கிய காரணமே ஒருவர் தான் என கூறப்படுகிறது.

அவர் வேறு யாரும் அல்ல… சிம்புவின் அப்பா தான் இவர் சினிமா உலகில் பலர் வெற்றி படங்களை கொடுத்தவர் இவரது படங்களில் அதிகம் பஞ்ச் டயலாக் இருக்குமோ தவிர கெட்ட பழக்கங்கள் மற்றும் முத்த காட்சிகள் போன்ற அதிகம் இடம்பெறாது மேலும் எஸ்டிஆர் என் அப்பா ஒரு குடிப்பழக்கம் இல்லாதவர்..

இதனால் சிம்பு தனது அப்பாவை போல இருக்க ஆசைப்படுகிறார் அதனால் தற்பொழுது தனது படங்களில் ஒரு சில தேவையில்லாத காட்சிகளை நீக்கி அவர் நடிகர் ரெடியாக இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Comment