பில்லா-2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம் அதிர்ச்சியில் வெள்ளி திரை பிரபலங்கள்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த தீப்பெட்டி கணேசன் பின்னாட்களில் டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

இவர் தமிழில் ரேணிகுண்டா மற்றும் அஜித்தின் பில்லா 2 ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.

அதன் பிறகு இவருக்கு சொல்லும்படியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனதால் குடும்பத்தை கவனிக்க கூட காசு இல்லாமல் திணறினார்.

மேலும் ஊனமுற்றவராக தீப்பெட்டி கணேசன் இருந்ததால் அவரால் வெளியே சென்று வேலையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது இதனையடுத்து தனது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நண்பர்களுடன் உதவியை நாடினார்

ஆனால் அவர்கள் அனைவரும் கொஞ்சம் கொடுக்க ஒரு கட்டத்தில் பத்தாமல் போனதால் வெள்ளித்திரை டாப் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோர் உடன் உதவியை நாடினார்கள்.

ஆனால் அவர்களுக்கு முன்பாக பல வெள்ளித்திரை பிரபலங்கள் முன் வந்து இவருக்கு உதவியை செய்தனர். மேலும் அவரது பிள்ளைகள் படிப்பு செலவுக்கும் பார்த்துக் கொண்டனர்.

குடும்பத்தை கவனிக்க இது இருந்தாலும்சமிப காலமாக அவரது உடல்நிலை ஆரம்பத்திலிருந்தே சற்று சீராக இல்லாமல் இருந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.

இச் செய்தியை  கேட்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு சிலர் அவரது புகைப்படத்தை வெளியிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறி வருகின்றனர் அந்த வகையில் சீனு ராமசாமி இவரைப் பற்றி ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment