சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா.? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

80,90 காலகட்டத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் படங்களில் தொடர்ந்து கிளாமராக நடித்த காரணம் இவருடைய உடல் அமைப்பு மற்றும் பார்ப்பதற்கு செம்ம அழகாகவும் சூப்பராகவும் இருந்ததால் பலரும் இவரை கிளாமர் காட்சி மற்றும் ஐட்டம் டான்ஸ்க்கு நடிக்க வைத்து அழகு பார்த்தனர்.

அதிலேயும் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டார். ஒரு கட்டத்தில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர் நடிகைகளை கமிட் செய்கிறார்களோ இல்லையோ சில்க் ஸ்மிதாவை கமிட் செய்ய லைனில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு பிரபலமானவராக சில்க் ஸ்மிதா இருந்தார் இவர் ரஜினி கமல் என தொடங்கி பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

மேலும் இவர் எவ்வளவு பெரிய டாப் ஹீரோ வந்தாலும் தன் வேலையை தான் பார்ப்பார் அந்த அளவிற்கு கெத்தானவராகவும் சினிமா உலகில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் கிளாமராக நடித்து வந்த இவர் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் மட்டும் முற்றிலும் மாறுபட்டு குடும்ப கேரக்டரில் சூப்பராக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் சினிமா பிரபலங்கள் பலரும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் அவர் கிளாமர் நடிகையாகவே ஓடினார். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதாவுக்கு கிளாமரை விட ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

ஆனால் சினிமா உலகம் அவரை மாற்றி விட்டது இவர் 35 வயது இருக்கும் பொழுது இந்த சினிமா உலகை விட்டு மறைந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் சில்க் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது ஆம் இவர் கடித்த ஆப்பிள் ஒன்று அந்த காலத்திலேயே 100 ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளதாம். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment