பட்டுப் பாவாடை பிறகு செல்பி..! இரண்டு மகள்களுடன் சந்தோஷமாக இருந்து விட்டு கடைசியாக தந்தை எடுத்த விபரீத முடிவு.!

தஞ்சாவூர் மாவட்டம் போரா ஊரணி  அருகே உள்ள சேதுபாவாசந்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் இவர் கீற்று ஏற்றிச்செல்லும் வேனில் டிரைவராக பணிபுரிந்துள்ளார், இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருக்கிறார் இவரை ஏழு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் கதிரவன்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், இந்த நிலையில் கதிரவன் மற்றும் சுகன்யா ஆகிய இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது, ஒரு நாள் தன்னுடைய இரண்டு மகள்களையும் கதிரவனிடம் விட்டுவிட்டு சுகன்யா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கதிரவன் பல முறை தன்னுடைய மனைவியை அழைத்து வர முயற்சி செய்துள்ளார் ஆனால் அனைத்தும் வீணாகின, இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தொழிலும் குறைந்து வருமானமும் முடங்கிப் போனது, இதனால் தனது மகள்களுடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் கதிரவன் அதுமட்டுமில்லாமல் மனைவியை பிரிந்து மன வேதனையிலும் இருந்ததாக தெரிகிறது.

மேலும் சம்பவ தினத்தன்று கடையில் உணவு வாங்கிக் கொண்டுவந்து கதிரவன் அதில் விஷம் கலந்து தனது மகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளார் அதன் பின்பும் மயங்கிய நிலையில் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் அங்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனளிக்காமல் 2 மகள்களும் உயிரிழந்தனர், தற்பொழுது கதிரவனுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்.

கதிரவனுக்கு கடன்தொல்லை மனைவி பிரிந்து சென்ற மனவேதனை என அனைத்தும் அவரை மிகவும் பாதித்துள்ளது, அதனால்தான்  இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார். மேலும் சம்பவ தினத்தன்று இரண்டு மகள்களையும் தானே குளிப்பாட்டி பட்டு சட்டை பட்டு பாவாடை உடுத்தி உள்ளார் பின்னர் தன்னுடைய குழந்தைகளுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதன்பிறகு கடைக்கு உணவு வாங்கிவந்து கதிரவன் அதில் விஷத்தைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் அருந்தியுள்ளார், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் கதிரவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் தான் சுகன்யா அவரை விட்டு சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

Leave a Comment