வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கமல்ஹாசனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர் எளிதில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை தொடர்ந்து சமீப காலங்களாக இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் வக்கீல் சாப் திரைப்படம் வெளிவந்து இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்ததுத.தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ்வுடன் இணைந்து சாலர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் ஜட்டில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் தற்போது வீட்டில் தனது காதலருடன் நேரத்தை வருகிறார்.
அந்த வகையில் இவரின் காதலரான சாந்தனு டூடுல் கலைஞர் ஆவார். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டூடுல் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த டூடுல் கலைஞர் என்ற விருதை பெற்றார். அந்த வகையில் சாந்தனு வரைந்த ஓவியங்களுக்கு இடையே அமர்ந்து கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் நான்கு சுவருக்குள் நாங்கள் உருவாக்கும் சொற்க்கம் என்றும் கூறியிருந்தார். அதோடு நான்கு சுவருக்குள் நாங்கள் உருவாக்கின சொர்க்கம், எங்கள் கனவுகள் அனைத்தையும் வைத்திருக்க எண்ணும் உலகம், வண்ணங்களின் வழியே சொட்டுகிறது.
செல்ல பிராணிகளின் கால்களால் உருவான வண்ணம், ஒரு சிறிய வீட்டை உருவாக்குங்கள் அது, உங்கள் சொர்க்கத்தை, எப்பொழுதும், இருண்ட காலங்களில் கூட உருவாக்கும் என்ற உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார்.