என் பின்புறத்தில் வந்து அந்த நபர்… கசப்பான அனுபவம் குறித்து பகிர் கிளப்பிய சுருதிஹாசன்.!

shruti haasan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுருதிஹாசன் இவர் 3 என்ற திரைப்படத்தின் மூலம் தனுஷிற்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தார், இதனை தொடர்ந்து ஏழாம் அறிவு திரைப்படத்திலும் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயுடன் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் சுருதிஹாசன் நடித்துள்ளார் இவர் கமலஹாசனின் மகள் இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் பல நடிகைகள் உரையாடுவார்கள், அந்த வகையில் சுருதிஹாசன் அவர்களும் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார்.

யாரோ ஒருவர் பின் தொடர்வதை கண்டுபிடித்து கத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மும்பை விமான நிலையத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினார் அதற்கு சுருதிஹாசன் கூறியதாவது என்னைப் பின் தொடர்ந்து வந்த நபர் யார் என்று எனக்கு தெரியாது விமான நிலையத்தில் அவர் என்னை பின்தொடர்கிறார் என்று தெரிந்து கொண்டேன் எனக்கு மிகவும் நெருக்கமாக வந்ததால் நான் கொஞ்சம் பதட்டத்தில் இருந்தேன்.

அதனால் மிகவும் வேக வேகமாக விமான நிலையத்தில் இருந்து சென்றேன் காரில் ஏறும் வரை அவர் என்னை பின் தொடர்ந்து வந்ததால் உடனே நான் பயந்து போய் நீங்கள் யாரென்று மிகவும் சத்தமாக கேட்டேன் உடனே அந்த மர்ம நபர் அங்கிருந்து நழுவி சென்றார்.

நான் எனக்கு என்று எந்த ஒரு பவுன்சர் களையும் வைத்துக் கொள்வது கிடையாது ஏனென்றால் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் அதனால்தான் எந்த ஒரு பவுன்சரையும் அருகில் வைத்துக் கொள்ளவில்லை ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பவுன்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டால் நல்லா இருந்திருக்கும் என தோன்றுகிறது என சுருதிஹாசன் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

shruthihaasan
shruthihaasan