கிரண்,யாஷிகா போன்ற கவர்ச்சி நாயகிகளை ஓரம் கட்டும் ஸ்ரேயா சரண்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார். இதனை அடுத்து பிறமொழி படங்களான இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

பின் 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்த அவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, கந்தசாமி, குட்டி போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். மேலும் அவர் தமிழில் மீண்டும் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனையடுத்து அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் திருமணம் முடிந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அம்மணி.

அதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் பால்கனியில் நின்று கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அத்தகைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment