சூட்டிங் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபக்கம் விவசாயம் செய்யும் வெற்றிமாறன் – ரசிகர்களையே ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார். 2007-ஆம் ஆண்டு தனுசு வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை எடுத்து அசத்தியிருந்தார்.

முதல்படமே வெற்றிமாறனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது அடுத்து தனுஷை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார். ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார் இந்த படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக மாறியதை அடுத்து டாப் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தார் வெற்றிமாறன்.

இப்போ டாப் நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர்  இயக்குனர் வெற்றிமாறன் சினிமாவில் இவர் படங்களை இயக்குவதையும் தாண்டி தயாரிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வெற்றிமாறன் இருக்கிறார் இவர் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களை இயக்கி தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர் இப்பொழுது எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது தற்போது கூட இவர் இயக்கத்தில் பல்வேறு படங்கள் வெளியாக இருக்கின்றன முதலாவதாக விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம் வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படி அடுத்தடுத்த நடிகர்களை வைத்து படங்களை கொடுத்துக் கொண்டே வருகிறார்.

முதலாவதாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இது குறித்தும் அவர் பேசியுள்ளது சினிமாவைவிட நாற்று நடுவது மிகவும் கஷ்டம் என கூறினார். இவர் தனது வயலில் இறங்கி விவசாயம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு பாராட்டுகளை கூறிவருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்

vetrimaran
vetrimaran
vetrimaran
vetrimaran

Leave a Comment