பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பிறகு பாவனி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! கண்கலங்கும் ரசிகர்கள்.

பிரபல விஜய் டிவியில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் மக்களின் பேராதரவைப் பெற்று சீசன் சீசனாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் சென்ற வாரம் ஒளிபரப்பான கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ராஜு டைட்டிலை வென்று ரூ 50 லட்சம் பரிசு தொகையை பெற்றுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா, பாவணி, அமீர் போன்றவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டியாளர்கள் பலரும் மற்ற போட்டியாளர்களை சந்தித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த சின்னத்தம்பி சீரியலில் பிரஜனுக்கு ஜோடியா இணைந்து ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் பவானி ரெட்டி.

பின்பு இவர் வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசையில்  அவரது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்படி மீடியா உலகில் ரீச் ஆகி அதன் மூலம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பைனல்ஸ் வரை வந்துள்ளார்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பவாணி ரெட்டி ஒரு அதிர்ச்சி தகவலை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். வெளியே வந்த சில நாட்களிலேயே பாவணி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளாராம்.

bavani
bavani

Leave a Comment