இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் ஷிவானி நாராயணன் – படத்தை இயக்க போவது யார் தெரியுமா.?

இளம் வயதிலேயே சீரியல், மாடலிங் என இரண்டிலும் கலந்து கொண்டு வலம் வந்தவர் பிரபலம் ஷிவானி நாராயணன். மீடியா உலகில் எதுவாக இருந்தாலும் அதில் திறன்பட வெற்றியை நோக்கிய பயணத்தில் ஷிவானி நாராயணனை அடிச்சிக்க ஆளே இல்லை. ஆம் குறைந்த வயதிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன்  சீரியல்களில் நடித்து அசத்தினார் இதுவரை அவர் பகல் நிலவு, கடை குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து அசத்தினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென மாடலிங் துறையில் இருந்ததை வெளிக்காட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இவர் தினமும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடனம் ஆடுவது மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்தவர்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் நான்காவது சீசனில் இவர் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார் வெளியே வந்து அவருக்கு உடனடியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் நீண்ட இடைவேளைக்குப்பின் இப்பொழுது  படவாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

முதலாவதாக விஜய் சேதுபதி உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை  தொடர்ந்து அண்மையில் கூட இயக்குனர் பொன்ராம் உடன் இவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவானி நாராயணன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம் இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரியவந்துள்ளது. இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து உள்ளதால் ஷிவானி நாராயணனின் மார்க்கெட்  மிகப்பெரிய ஒரு உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment