பிரபலமாவதற்கு முன்பே இவ்வளவு பில்டப்பா..? தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய சிவாங்கி..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் சிவாங்கி இவ்வாறு பிரபலமான நமது பாடகி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க முக்கிய காரணம் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் வயிறு குலுங்க வைத்தார் என்றே சொல்லலாம் அந்த வகையில் இவர் இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து டான் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஆனால் சிவகார்த்திகேயனுடன் இவர்  திரைப்படத்தில் நடித்தது ரசிகர்களின் கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளானது என்றே சொல்லலாம் மேலும் இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என பலர் கமெண்ட் தெரிவித்து வந்தார்கள் ஆனாலும் தற்போது சிவாங்கி நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த முக்கால்வாசி காட்சிகளையும் கட் செய்து விட்டார்களாம் பட குழுவினர்கள் ஏனென்றால் இவருக்கு சுட்டு போட்டாலும் சுத்தமாக நடிப்பு வரவே மாட்டேங்குது என்று பலர் கருத்து கூறியுள்ளார்கள் மேலும் நடிக்க வரவில்லை என்றாலும் கொடுக்கும் அலப்பறைக்கு பஞ்சமே கிடையாது  என குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் சிவாங்கி தனக்காக மேக்கப் போடும் மேக்கப் மேனை தானே அழைத்து வருகிறாராம் மேலும் அவருக்கு சம்பளமாக 14,000 ரூபாய் கூறுவது மட்டுமில்லாமல் தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் அந்த படங்களில் தனக்கான காஸ்டியூம் சரியில்லை என பல குறைகள் கூறி வருகிறாராம்.

மேலும் இந்த டிரஸ் எனக்கு பிடிக்கவில்லை என படபிடிப்பு தளத்திலிருந்து சட்டென்று கிளம்பி விட்டாராம் இதனால் அன்று நடக்க இருந்த படப்பிடிப்பு சிவாங்கியால் தடைபட்டதாம்  அதேபோல சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு செல்லும்பொழுது தன்னுடைய குடும்பத்துக்கும் சேர்த்து டிக்கெட் போடும்படி தயாரிப்பாளர் இடம் கூறியிருந்தாராம்.

தற்பொழுது காமெடி நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் முகம் காட்டி வரும் சிவாங்கி அலப்பறை இப்பொழுதே இப்படி இருக்கும் பொழுது ஹீரோயின் ஆகிவிட்டால் அவ்வளவுதான் கையில் கூட பிடிக்க முடியாது என பலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

Leave a Comment