இந்தியத் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் ஆனாலும் இவர் ஹிந்தியில் தான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் ஷில்பா ஷெட்டி ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, உருது, பிரெஞ்சு கன்னடம், ஆங்கிலம் என அனைத்து மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர்.
மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்த பின்னர் மாதுங்கா வில் உள்ள போடர் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். நாட்டியத்தில் அதிக ஆர்வம் இருந்ததால் நாட்டியக் கலையில் கை தேர்ந்தவராக விளங்குபவர். அதேபோல் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். மேலும் பள்ளி பருவத்தில் கைப்பந்து விளையாட்டு அணி தலைவராக இருந்தவர். சில்பா செட்டி தற்பொழுது தன்னுடைய பெற்றோர் மற்றும் இளைய சகோதரி பாலிவுட் நடிகையுமான ஸ்மிதா செட்டி உடன் வசித்து வருகிறார்.
1993 ஆம் ஆண்டு சினிமாவில் முதன் முதலாக ஹிந்தி திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படமே நல்ல விமர்சனங்களை பெற்றதால் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதேபோல் தமிழில் முதன்முதலாக மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் பெரிதாக தமிழில் நடிக்கவில்லை.
தமிழில் குஷி திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் அதன் பிறகு பெரிதாக தமிழில் இவருக்கு பட வாய்ப்பு அமையவில்லை அதனால் ஹிந்தியில் தான் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இவர் படங்களில் நடிப்பதற்கு விருப்பம் காட்டவில்லை.
இப்படி இருக்க ஷில்பா ஷெட்டி தற்போது எப்படி இருக்கிறார் எனரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது இந்த நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படம் இளம் நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு அமைந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.