பல வருடங்கள் கழித்து சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் இவர்தான்.? ரசிகர்களுக்கு ஷாக் தரும் தகவல் இதோ.

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான் இவரது ஆரம்ப காலகட்டத்தில் பலரும் இவரை அவமான படுத்தினாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் இவர் தனது அயராத உழைப்பின் மூலம் தற்போது தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை இயல்பாக காட்டுவது தான் மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.பொதுவாக ரஜினியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த திரைப்படம் என்றால் அது சந்திரமுகி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பை விட இதில் நடித்த ஜோதிகா நடிப்பு ரசிகர்களால் தற்பொழுது வரை பாராட்டப்பட்டு வருகிறது.

ஏனென்றால் ஜோதிகா இந்த திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் தெலுங்கு வசனம் பேசுவதும் நடனம் ஆடுவதும் போன்ற செயல்கள் ரசிகர்களை கவர்ந்து விட்டது இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தான் ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வைக்க நடிகை நவ்யா நாயர் அவர்களை தான் நடிக்க வைக்க படக்குழு அணுகினார்களாம். ஆனால் அவர் அப்பொழுது பி வாசு இயக்கிய கன்னடத்தில் திரிஷ்யம் படத்தில் நடித்து வந்ததாகவும் அதனால் இவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை என தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

navya nair3
navya nair3

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் யார் வேணாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது ஆனால் ஜோதிகா நடிப்பு எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

Leave a Comment