கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு மகாபலிப்புரத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது இருவரும் கோவில்கள், ஹனிமூன் என சுற்றி விட்டு தற்பொழுது தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலையை துவங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உருகி உருகி புகைப்படங்களுடன் இவர் வெளியிட்டுள்ள பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் தாயார் குறித்த பெருமையாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்பதும் எனது அம்மாவிற்காக நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதாவது என்னுடைய திரைப்படங்கள் வாழ்க்கை பாடல்கள் ஆகிய அனைத்திலும் நான் சொல்ல விரும்புவது எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய் என் வாழ்க்கையே உனக்காக நான் அர்ப்பணிக்கிறேன்,ஒவ்வொரு நாளையும் ஒரு சிறப்பு நாளாக மாற்ற வேண்டும் என விரும்புகின்றேன், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு எல்லாம் பலத்தையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற இறைவனை வேண்டுகிறேன் எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் எளியதாகவும் வெற்றிகரமாகவும் மாற்ற நீங்கள் எனக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தீர்கள் நீங்கள் எனக்கு கொடுத்த அனைத்து ஆதரவு மற்றும் கடினமான உழைப்பிற்காக உங்களுக்கு சிறந்த தருணங்களை வழங்கவும் மகிழ்ச்சியான வயதை காணவும் வாழ்க்கையின் அனைத்து நல் வாழ்வை அனுபவிக்கவும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் எனது மீனாகுமாரி அம்மா அவர்களுக்கு இனிய பிறநதநாள் வாழ்த்துக்கள்.