பற்ற வைத்த தோழி, பத்ரகாளியான கிகி.! சாந்தனுவின் 8 வருட பிரேக் அப்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாந்தனு. இவர் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் மகன் ஆவார் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் பிரேக் அப் ஆனது குறித்த கவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கீர்த்தி. தற்போது சின்னத்திரையில் அதிகம் பார்க்க முடியவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் விருது வழங்கும் விழா, இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சாந்தனு கீர்த்தி இருவரும் பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதற்க்கு இடையில் எட்டு வருடங்கள் காதலிக்கும் பொழுதே கீர்த்தி மற்றும் சாந்தனு பேசாமல் இருந்து வந்துள்ளார்கள் அதாவது சாந்தனு குறித்து தவறான தகவலை கீர்த்தியிடம் அவரது தோழி கூறியுள்ளார். அதனைச் சாந்தனு சமீப பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அவர் கூறுகையில்,  கீர்த்தியும் நானும் நல்லா பழகிக்கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில் என் ஃப்ரெண்டும் நானும் காபி ஷாப்ல காபி குடிச்சுக்கிட்டு இருந்தோம் அதை வந்து கீர்த்தி பிரண்ட் பார்த்து அவங்க என்ன தப்பா நினைச்சு கடைசியில் கீர்த்திக்கும் எனக்கும் சண்டை வந்துடுச்சு எட்டு வருடங்கள் பிரிந்து இருந்தோம் திடீர்னு ஒரு நாள் டான்ஸ் ரிகர்சல் பார்க்கும்பொழுது இரண்டு பேரும் மீட் பண்ணுனோம்  அப்பொழுது கமலஹாசன் சார் அவர்களின் சாங் ஓடுச்சு அதுக்கு வந்து ஆடிக்கொண்டே இருக்கும் பொழுது எங்களுக்குள் இருக்கின்ற அந்த காதல் வெளியாச்சு உடனே வந்து வீட்டில் இருக்கும் பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்துக் கொண்டதாக சாந்தனு கூறியுள்ளார்.

Leave a Comment