பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க வந்த அஜித் ஷாலினி.! வைரலாகும் வீடியோ

தமிழ் திரை உலகில் பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்த்து வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 30 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவில் சுமார் 150 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் மணிரத்தினம் இயக்கிய இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.ரசிகர்களை தவிர்த்து பார்த்தால் சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களும் திரையரங்குகளில் சென்று படம் பார்த்துவிட்டு மக்களிடையே விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் தனது மகளுடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாலினி அஜித் இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.பொன்னியின் செல்வன் திரைப்படம் பல வருடங்களாக வரலாற்று கதையாகவே இருந்து வந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் அதனை மக்களுக்கு திரையில் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனது விடாமுயற்சியினால் ஒரு வழியாக பொன்னின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார் மேலும் இதில் சியான் விக்ரம், ஜெயம் ரவி,கார்த்தி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளதால் படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version