குழந்தைகளை குஷிப்படுத்திய சக்திமான் ஹீரோவா இப்படி முகம் சுளிக்கும் செயலை செய்தது.! குவியும் கண்டனம்

90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் மற்றும் மகாபாரதத்தில் நடித்த முகேஷ் கண்ணா தான். ஒரு காலகட்டத்தில் தூர்தர்ஷனில் சக்திமானை பார்க்க 12 மணி ஆகி விட்டாலே போதும் ஒட்டுமொத்த குழந்தைகளும் டிவி முன்பு அமர்வது வழக்கம்.

அந்த அளவு சக்திமான் சீரியல் மிகவும் பிரபலமடைந்தது, இந்த சீரியல் 1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. 90ஸ் ஹிட்ஸ் குழந்தைகளுக்கு சக்திமான் சீரியலில் நடித்த கதாபாத்திரத்தை பிடிக்காதவர்களே கிடையாது அந்தளவு அந்த கதாபாத்திரம் இந்திய ரசிகர்களிடையே மிகவும் ஃபேவரைட் ஒன்றாக இருந்தது.

முகேஷ் கண்ணா சக்திமான் மட்டுமல்லாமல் மகாபாரதம் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர், அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட தொடர்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார், தற்போது இவருக்கு 62 வயதாகும், விரைவில் சக்திமான் படம் உருவாகும் என பல வருடங்களாக கூறி வருகிறார்.

ரசிகர்களின் ஹீரோவாக இருக்கும் முகேஷ் கண்ணா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார், அவர் கூறியதாவது பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகுதான் மீடூ  சர்ச்சை உருவானது. என்று அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ளார்.

அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் கண்டனம் வந்து கொண்டிருக்கிறது, மேலும் அந்த பேட்டியில் பெண்கள் தங்களை ஆண்களுக்கு நிகரானவர்கள் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் சமூகத்தில் ஏறபட்ட பிரச்சினைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நடக்கின்றன. அதனால் பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும் எனப் பேசியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் சக்தி மானுக்கு மூளை மழுங்கி விட்டதா என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Leave a Comment