இரவு நேரத்தில் நடுரோட்டில் போராடிய ஷகீலா.! அதுவும் இந்த விஷயத்திற்காகவா.?

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா இவர் ஒரு காலத்தில் கிளாமர் நடிகையாக வலம் வந்தாலும் தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் பங்கேற்று அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஷகீலாவை பலரும் நல்ல மனசு அவங்களுக்கு என்று கூறும் படி நடந்து கொண்டார்.

தற்பொழுது ஷகீலா சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகிறார் என்றே கூறலாம். அந்த வகையில் இவரைப் பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதாவது அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்சனைக்காக நடுரோட்டில் இறங்கி ஷகீலா போராடி உள்ளாராம்.

அதாவது அவரது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பு குடும்பமாக வசித்து வரும் நபர்களுக்கு ரூ.2500 எனவும் பேச்சுலர்ஸ் களுக்கு ரூ.9000 எனவும் பராமரிப்பு செலவாக வாங்கி வருவார்களாம் அந்த தொகை செலுத்தப்பட இல்லை என்பதால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளார்களாம்.

இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பல பேர் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் செய்துள்ளார்களாம் இதனை அறிந்த ஷகீலா இரவு நேரம் என்று கூட பார்க்காமல் அந்த போராட்டத்தில் பேச்சுலர்ஸ்களுக்கு ஆதரவாக பேசியதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

shakeela
shakeela

இவர் செய்த செயலைப் பற்றி இவரது ரசிகர்களும் இவரை வாழ்த்தி வருவது மட்டுமல்லாமல் பலரும் நீங்கள் புதிய புதிய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை நீங்கள் தற்பொழுது தமிழ் சினிமா பக்கம் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் அதுதான் எங்களது ஆசையாக இருக்கிறது எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment