அரசாங்கம் தரும் சாப்பாட்டை சாப்பிடாமல் ஜெயிலில் இருக்கும் ஷாருக்கான் மகன்.? பதிலாக அவர் சாப்பிடுவது என்ன தெரியுமா.?

பாலிவுட் சினிமாவில் டாப் நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் ஷாருகான். சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ஷாருக்கான் தற்போது முதல் முறையாக இயக்குனர் அட்லி உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் காமெடியில் யோகி பாபு என தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் விளம்பர படங்கள் மற்றும் கிரிக்கெட் போன்ற அனைத்து துறையிலும் கால் தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார்.

ஷாருக்கான் இவரைத் தொடர்ந்து இவரது மகன் ஆர்யன் வெகுவிரைவிலேயே சினிமா உலகில் கால்தடம் பதிக்க ரெடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென போலீஸ் அவரை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதை பாட்டி கொண்டாடினார். அப்போது போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். இதில் ஆரியம் தாண்டி பல சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஆர்யன் கான் ஜெயிலில் இருக்கிறார் எப்படியும் தனது அப்பா வெகு விரைவிலேயே தன்னை வெளியே எடுத்து விடுவார் என நம்பியிருக்கிறார். அதற்கேற்றார் போல 10 லட்சம் 20 லட்சம் ஒரு நாளைக்கு காசு கொடுத்து மிகப்பெரிய வக்கீலை கையாண்டு தான் வருகிறார் ஆனால் அவரால் முடியவில்லை.

ஆர்யன் கானுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது இருக்கின்றனர். தற்போதைக்கு ஜெயிலில் இருந்தாலும் அரசாங்கம் தரும் சாப்பாட்டை தொடுவதே இல்லை அதற்கு பதிலாக வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீரை உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் சைடில் இருந்து கூறப்படுகிறது.  போதைப்பொருள் விவகாரம் சினிமா பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது தற்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன் இந்த லிஸ்டில் தற்போது தள்ளப்பட்டுள்ளது  பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment