பிரபல ரயில் நிலையத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா.! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக ஒரு சில திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

தமிழில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களையும் இயக்க தயாராகி வருகிறார் அதன்படி பார்த்தால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த திரைப்படத்தை இவர் தான் இயக்கி வருகிறார் அதற்கான ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா,யோகி பாபு,கலை இயக்குனர் முத்துராஜ் போன்ற பல தமிழ் சினிமா பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் நயன்தாரா எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரியவில்லை இதனை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பலரும் இந்த திரைப்படத்தில் இருந்து புகைப்படங்கள் வெளிவராதா எனக் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது ஆம் புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படப்பிடிப்பு மிகவும் அருமையாக நடந்து வருகிறது அதிலும் குறிப்பாக ஷாருக்கான் இந்த திரைப்படத்தில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது என இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் கூறுகிறார்கள்.

nayanthara
nayanthara

நடிகை நயன்தாரா எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல கோடி வசூல் செய்து விடும் அந்த வகையில் இவர் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment