செம்பருத்தி சீரியல் முடியவுள்ள நிலையில் சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கும் ஷபானா.!

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளை விட வரும் சில நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  திரைப்படத்தில் நடித்து பிரபலமடைய வேண்டுமென்றால் அந்த நடிகை குறைந்தது ஐந்து திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்க முடியும்.

ஆனால் சின்னத்திரை நடிகைகள் தாங்கள் அறிமுகமாகும் முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த விடுகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அந்த செம்பருத்தி சீரியலிளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷபானா.

இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சில காலங்கள் வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் பேவரட் சீரியலாகவும் இருந்து வந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலில் ஹரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகினார்.

எனவே கார்த்தி நடித்து வந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் அறிமுகமானார்.  என்னதான் புதிய திருப்பங்கள் அந்த சீரியலில் வைத்து வந்தாலும் இந்த சீரியல் தற்போது பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.  இப்படிப்பட்ட இந்த சீரியல் முடியவுள்ள நிலையில் ஷபானா புதிய சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

அதாவது நடிகை ஷபானாவிற்கு தொடர்ந்து ஏராளமான சீரியகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் ஆனால் ஷபானா அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இறுதியாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் முன்னணியில் இருந்து வரும் நிலையில் அடுத்ததாக ஷபானா நடிக்கும் சீரியல் கயல் சீரியலுக்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment