உச்சத்திலிருந்த பிரபல சீரியலுக்கு இப்படி ஒரு நிலைமையா.? TRP-யில் முதல் ஐந்து இடத்தில் கூட இடம் பெறவில்லையே.

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பல புதிய முக நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் TRP-யில் உச்சியில் இருந்த ஒரு நாடகம் தொடர்ந்து சரிவை கண்டு TRP-யில் ஐந்தாவது இடத்தை கூட பிடிக்க அளவிற்கு பின்தங்கியுள்ளது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் தான் ரசிகர்களைக் கவரும் வகையில் பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் TRP-யில் முதல் இரண்டு இடங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா இந்த இரண்டு சீரியலும் பெற்றுள்ளது.பொதுவாக இந்த சீரியல்கள் எப்பொழுதுமே TRP-ல் முதல் ஐந்து இடத்தை பிடித்து விடும்.

இந்த சீரியலுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தான் எப்போதும் TRP-யில் முதல் ஐந்து இடத்தில் ஏதாவது ஒன்றைக் பிடித்துவிடும். இவ்வாறு உச்சியிலிருந்து வந்த இந்த நாடகம் சமீப காலங்களாக  TRP-யில் எந்த இடத்தையும் பிடிப்பதில்லை.

இதுவே இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் விலகியது தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் சபானா மற்றும் கார்த்திக் அவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வந்தது.

Leave a Comment