படுக்கைக்கு அழைத்து பச்சை பச்சையாக மெசேஜ் அனுப்பி உள்ள கல்லூரி பேராசிரியர்.! ஆதரத்தை வெளியிட்டு முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட சௌந்தர்யா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் சௌந்தர்யா இதனை தொடர்ந்து இவர் தொடர்ந்து சினிமா திரைப்படத்திலும் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சவுந்தர்யா பல குறும்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியலிலும் நடித்துள்ளார். இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பல நடிகைகள் தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக சமூகவலைதளத்தில் பெரிதாக நம்பி இருக்கிறார்கள் அதனால் சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்வார்கள். அந்த வகையில் நடிகை சௌந்தர்யாவும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடியவர்.

Soundarya

இவரை மிகப்பெரிய ரசிகர் கூட்டமே பின்தொடர்ந்த வருகிறது. இந்த நிலையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் அவருக்கு ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ்களை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியதாவதுமிகவும் கொச்சையாக நடிகை சௌந்தர்யாவை படுக்கைக்கு அழைத்து மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரின் முகத்திரையைக் கிழித்து வெளி உலகிற்கு வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்.

Soundarya

அது மட்டுமல்லாமல் அந்த மர்மநபர் அனுப்பிய அனைத்து குறுந் தகவல்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொண்டு அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கவும் அந்த கல்லூரியில் படிக்கும் பெண்கள் கட்டாயமாக எச்சரிக்கையாக இருங்கள் என கூறியுள்ளார். அந்தப் பேராசிரியர் இடமிருந்து பாதுகாப்பாக இருங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பிறகு தன்னுடைய சமூக வலைதளத்தில் இருந்து அவரை பிளாக் செய்துள்ளார் இன்ஸ்டாகிராமில் வந்துள்ள புதிய ஃபியூச்சர் ஐ பயன்படுத்தி அந்த நம்பரை பிளாக் செய்து உள்ளார் இன்ஸ்டாகிராமில் வந்துள்ள புதிய அப்டேட்டில் ஒரு நம்பரை பிளாக் செய்த பிறகு அந்த நபர் வேறு ஒரு ஐடியில் இருந்து வந்தாலும் பிளாக் செய்யப்படும் வேறு ஒரு கணக்கை துவங்கினாலும் அது பிளாக் ஆகிவிடும் என்பதை அவர் கூறியுள்ளார்.

Soundarya

தனக்கு கொச்சை கொச்சையாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய பேராசிரியரின் முகத்தை கிழித்து தொங்க விட்டதால் அவரை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் பல பெண்கள் தங்களுக்கு அனுப்பப்படும் இதுபோல் குறுஞ்செய்தியை பயந்து முடங்கி கிடக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் இவ்வளவு தைரியமாக இவர் வெளியிட்டுள்ளது மற்ற பெண்களையும் தைரியப்படுத்தி உள்ளது.

அதேபோல் இதற்கு முன் பாடகி சின்மயி தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை வெட்டவெளிச்சமாக வெளியிட்டு பலரின் முகத்திரையை கிழித்து உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Soundarya

Leave a Comment

Exit mobile version