காதலனை கரம் பிடித்த செரும்பருத்தி சீரியல் நடிகை ஷபானா – மணப்பெண் கோலத்தில் ரசிகர்களுக்கு திடீரென சொன்ன செய்தி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இவை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நம்பர்-1 சீரியலாக வலம் வருகிறது. மேலும் தமிழ் சீரியல்களில் டிஆர்பி லும் முதலிடத்தில் வகித்து வந்த தொடர் ஆகும். இந்த தொடர் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானாவிற்கு இந்த தொடரின் மூலம் பல ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

மேலும் ஷபானாவுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகர் இடையில் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நடித்து வருகிறார். ஆனால் இந்தத் தொடர் ஆரம்பத்திலிருந்து நாயகியாக ஷபானா தான் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஷபானாவிடம் ரசிகர்கள் பலரும் நீங்கள் யாரை காதல் செய்கிறீர்கள் மற்றும் யாரை திருமணம் செய்யப் போகிறார்கள் என பல கேள்விகள் கேட்டு வந்ததற்கு ஷபானா எந்த வித பதிலும் ரசிகர்களிடையே கூறாமல் திருமணம் நடப்பதற்குள் கண்டிப்பாக சொல்கிறேன் என கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு  அவரை காதலிப்பதாக தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படத்தையும்  வெளியிட்டிருந்தார்கள். தற்போது இவர் எனக்கு இன்று திருமணம் அதனால் எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த எனது ரசிகர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளும் எனக்கு கண்டிப்பாக தேவை என்று திருமண கோலத்தில் அவர் கூறி இருக்கிறார்.

நான் செம்பருத்தி சீரியலை முடித்துவிட்டு  சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வந்தேன். ஆனால் கடவுளின் ப்ளான் நான் சென்னையிலே செட்டில் ஆக வேண்டும் என்று உள்ளது என ரசிகர்களிடம் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment