விஜய் டிவியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை.!

தமிழ் சின்னத்திரை நடிகைகளுக்கு பெரிய பிரபலம் கிடைத்து வரும் நிலையில் இதன் மூலம் பிரபலமான அனைத்து நடிகைகளும் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வருகின்றனர். அப்படி தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் இதனை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலுக்கு மாறியுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தினை பெற்ற சீரியல் தான் கல்யாணம் முதல் காதல் வரை இந்த சீரியலில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் இதனைத் தொடர்ந்து இவர் விலகியதால் சரண்யா துரடி நடிக்க தொடங்கினார்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய ரீசினை கொடுத்தது இதனை அடுத்து பிறகு ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் முடிந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் ஆனால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

எனவே இந்த சீரியல் இதற்குப் பிறகு சின்னத்திரை பெரிதாக சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

saranya dhuraty
saranya dhuraty

விரைவில் இந்த சீரியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரண்யா துரடி இவ்வாறு சீரியல்களில் நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதன் மூலம் அந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment