துவண்டு நின்ற சீரியல் நடிகைக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி.!

கொரோனா தொற்று காரணமாக சீரியல்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக சில நாட்கள் கழித்து மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஏராளமான சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்தவகையில் ஒரு சீரியல் தான் வைதேகி காத்திருந்தாள்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டதால் இந்த சீரியலில் நடித்தவர்கள் வேறு வேறு சேனல்களில் நடிப்பதை தொடங்கினார்கள். அந்தவகையில் அந்த சீரியலின் ஹீரோயினான சரண்யா மற்ற சேனல்களில் பணியாற்ற ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்கள் கழித்து மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.  தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருக்கிறது.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சரண்யா ஆரம்ப காலகட்டத்தில் வாசிப்பாளராக தான் தனது கேரியரை தொடங்கியுள்ளார். இதன்மூலம் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் இருந்து பாதியிலேயே விலகியதால் சரண்யா இதுகுறித்து அழுத்தமான பதிவுகளை பதிவிட்டு வந்தார்.  சரண்யா இதற்கு முன்பு ஆயுத எழுத்து என்ற சீரியலிலும் நடித்து உள்ளார் இந்த சீரியலும் பாதியிலேயே முடிந்து விட்டது. தற்பொழுது சரண்யாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது அதில் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment