புதிய சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கண்ணம்மா.!எந்த சீரியலில் தெரியுமா வைரலாகும் வீடியோ.!

சிலருக்கு புதிதாக அறிமுகமான பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததோடு  மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.  அந்த வகையில் தற்போது உள்ள வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் எளிதில் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உருவாக்கிவிடுகிறது.

அந்த வகையில் தனது கண் அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் ரோஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதோட தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் படப்பிடிப்புகளில் சில நடிகர், நடிகைகளை வைத்து குறிப்பிட்ட இடத்திற்குள் சீரியல்களை படம் பிடித்து வருகிறார்கள்.

அந்தவகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் சில நாட்களாக கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வரும் ரோஷ்னியை காட்டவில்லை தற்பொழுது பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றில் இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கண்ணம்மா அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்து வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.  அவ்வபொழுது அந்த சீரியல் குழுவினர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment