திடீரென நள்ளிரவில் தனது கணவர் மீது புகார் அளித்த நடிகை ரட்சிதா.! கேவலமான செயலில் மாட்டிக்கொண்டு முழிக்கும் தினேஷ்..

ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் தங்களுடன் இணைந்து நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.  சீரியல் நடிகர்கள் தங்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களை அதே கேரக்டரில் பார்த்து விடுவதனால் அவர்களுக்கு பிடித்து விடுகிறது. ஆனால் அந்த நடிகைகளுக்கு என வேறு ஒரு கேரக்டர் இருக்கும்.

ஆனால் அந்த சீரியலில் அவர்கள் கொடுப்பது போல் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் அடக்க ஒடுக்கமாக நடித்து அனைவர் மனதையும் கவர்வார்கள். அந்த வகையில் இவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டு புரிந்த ஏராளமான பிரபலங்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ரச்சிதா மகாலட்சுமி திடீரென நள்ளிரவில் காவல் நிலையம் சென்று தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் இணைந்து நடித்து வந்த இவர்கள் பிறகு சில காலங்கள் காதலித்து வந்தனர்.

பிறகு ரட்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. அதாவது திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் ரட்சிதாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது எனவே இருவரும் பிரிந்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரட்சிதா தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளார். அதாவது தனது கணவர் தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் அளித்துள்ளார். எனவே போலீசார்கள் இது குறித்து தினேஷிடம் விசாரணை செய்ய இருக்கும் நிலையில் ஏற்கனவே ரட்சிதாவின் நெருங்கிய தோழியும் அவருக்கு சீரியலில் டப்பிங் கொடுப்பவருமான ஐஜி என்பவரும் தினேஷ் மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment