கடைய எப்ப சார் திறப்பீங்க கண்ணத்தில் கைவைத்தபடி ரட்சிதா மகாலட்சுமி.!

சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன குழந்தைகள் முன்னணி நடிகைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு சின்னத்திரை நடிகைகளில் ஒருசிலர் எந்த புகைப்படங்களை வெளியிட்டாலும் சில மணி நேரங்களில் அதிகப்படியான லைக்குகளை பெற்று விடுகிறது.

அந்த வகையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார் அதோடு ஜீ தமிழில்  ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் பணியாற்றி இருந்தார். அதன்பிறகு தனது கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து இல்லதரசிகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். தற்பொழுது நான் படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டுள்ளது இப்படிப்பட்ட நிலையில் சோகமாக இருப்பதை குறிக்கும் வகையில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கமே ஏன் இவ்வளவு சோகம் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment