அழகில் ஜொலிக்கும் சீரியல் நடிகை ப்ரியாவிற்கு இவ்வாவு பெரிய மகளா.! வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை பிரியா பிரின்ஸ்.

இவர் செய்தி வாசிப்பாளராக தான் தன் கேரியரை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

பிறகு சின்னத்திரையில் மாப்பிள்ளை, பொன்மகள்வந்தாள், கண்மணி போன்ற சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் நடித்தார் இந்த சீரியலில் தனது நடிப்புத் திறமை முழுவதையும் வெளிப்படுத்தியதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் 2.0, பசங்க 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு பிரியா தனது கணவர் பிரின்ஸ் உடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் பிரியா பிரின்ஸ் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

priya
priya

Leave a Comment