அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணுனாதா சினிமா வாய்ப்பு கிடைக்கும் என கூறிய பிரபல சீரியல் நடிகை.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஜூலி. இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஜோடி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார். இவ்வாறு இந்த ஜோடி நிகழ்ச்சியின் பொழுது சாய் சக்தியுடன் இவருடைய சின்ன மனக் கசப்பு ஏற்பட்டதால் இந்த ஜோடி நிகழ்ச்சியில் இருந்து  விலகினார்.

எனவே இதன் காரணமாக இவரை ஜோடி ஜூலி என்று தான் அழைப்பார்கள். இவ்வாறு இவர் தொடர்ந்து விஜய் டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து இருந்தாலும் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா மற்றும் சித்திரம் பேசுதடி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார் அதில் திரைமறைவு பற்றி ஏராளமான தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.  அதாவது நான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து இதோடு 25 வருடங்கள் ஆகிவிட்டது நான் அறிமுகமாகும்போது என்ன பிரச்சன இருந்தது தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டு நடிகைகளுக்கு சமீப காலங்களாக பெரிதாக சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இவ்வாறு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனை சினிமாவை விட சின்னத்திரையில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் அது சாதாரணமான ஒரு விஷயம் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம்.

புதிதாக சின்னத்திரைக்கு அறிமுகமாவார்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே அதிகபடியான வாய்ப்பு கிடைக்கும் என்றும் மேலும் விரைவில் பிரபலமடைந்து விடலாம் என்று மனதை மாற்றுவதற்கான பல வேலைகள் நடைபெறுகிறது.

எனவே புதிதாக வருபவர்கள் இதெல்லாம் தப்பு இல்லை என்று நினைத்து விடுகிறார்கள்.இதுதான் இங்கு வேதனைக்குரிய விஷயம் பல உண்மையான தகவல்களை மிகவும் தைரியமாக பகிர்ந்துள்ளார் ஜூலி.

Leave a Comment