முதன் முறையாக ஹீரோயினாக அவதாரமெடுத்த நீலிமாராணி.! ஜோதிடரின் பேச்சை கேட்டு பெயரையே மாற்றிக் கொண்டாரே.! என்ன பெயர் தெரியுமா.?

தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு வளர்ந்து இதயத்திருடன் நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகும் பல திரைப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார், அது மட்டுமில்லாமல் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் இவர் நடிப்பில் வெளி வெளியாகிய தாமரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படி சின்னத்திரையில் பிரபலமடைந்த நீலிமா ராணி தற்பொழுது வெள்ளித்திரையில் நாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் செல்வந்தர் என்பவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜோதிடரை அணுகி நீலிமாராணி ஜோதிடர்  அறிவுறுத்தலின்படி நீலிமா ராணி என்ற பெயரை நீலிமா இசை என மாற்றிக் கொண்டார். மேலும் நீலிமா ராணி நடிகையாக நடிக்கும் முதல் திரைப்படம் ‘கருப்பன் காட்டு வலசு’. சமீபத்தில் நீலிமா ராணி இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்தும் கதாபாத்திரம் குறித்தும் கூறியுள்ளார்.

குற்றப் பின்னணி உள்ள கதையம்சம் கொண்ட இந்தப் படம் பழைய பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை தற்பொழுது உள்ள காலகட்டத்திற்கு மாற்ற முயற்சிக்கும் ஒரு பெண் அப்போது அந்த ஊரில் குற்றம் நடக்கிறது அதன் விளைவு தான் திரைக்கதை என தெரிவித்துள்ளார்.

படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யத்தோடு திகிலுடன் உருவாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Leave a Comment