2வது திருமணம் செய்துக் கொண்டாலும் பிடித்த இடம் பெருசுதான்.! மகாலட்சுமியை விமர்சிக்கும் ரசிகர்கள்..

சினிமாவை பொறுத்தவரை திருமணம் செய்து கொள்வது என்பது அவரவர்களுடைய விருப்பம் அதாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து கொண்டு மற்றொருவரையும் திருமணம் கொள்ளலாம் திருமணம் செய்து கொள்ளாமலேயே பலரும் லிவிங் டு கேதரிலிருந்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சன் டிவி, விஜய் டிவி என தொடர்ந்து ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்து மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. பிறகு சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய திரை வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் நீண்ட நாள் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது ஆனால் சில வருடங்களிலேயே இவர்களிடையே கருத்து ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.பிறகு மகாலட்சுமி தொடர்ந்த ஏராளமான சீரியல்களை நடித்து கலக்கி வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இவர் சில நடிகர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சர்ச்சைகள் வெளியானது.

இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இவர்களுடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைவுலகில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் ரவீந்திரன் சந்திரசேகர். நலனும் தமயந்தியும், சுட்ட கதை ,நட்புனா என்னானு தெரியுமா, முருங்கக்காய் ஜீப்ஸ் போன்ற படங்களை தயாரித்தது இவர் தான்.

தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தற்பொழுது பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டதால் பிடிச்சாலும் புளியோகமாக தானே மகாலட்சுமி வருகிறார் மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version