வாய்ப்பு தரேன்னு சொல்லுவாங்க போன கேவலமா நடந்துப்பாங்க.. உண்மையை சொல்லி கதறும் நடிகை

Latha Rao : சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வருபவர் பிரபல நடிகை லதா ராவ். இவர்  இவர் தமிழில் நடித்த மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல சீரியல்களில் நடித்தார். அவை அனைத்துமே மெகா ஹிட் அடித்தது பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

தமிழை தாண்டி  தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் சீரியல்களில்  நடித்து உள்ளார். சீரியல்களில் பிரபலமான இவர்  அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும்  தென்பட்டார் அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தில்லாலங்கடி படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து நம் போய் சிரிக்கவும் வைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திறமையான நடிகையான லதா ராவ்  அவர்களுக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் எட்டி பார்க்கவே இல்லை  ஆனால் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை சொல்லி அழுதுள்ளார் அவர் சொன்னது..

சீரியல் நடிகை என்பதால் பல்வேறு படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் ரிஜெக்ட் செய்கிறார்கள் சீரியலில் நடிப்பது என்பது பெரிய தேசிய குற்றமா.? சீரியலில் நடிக்கிறேன் என்று தெரிந்த தான் அழைக்கிறார்கள் ஆனால் அங்கே போனால் பிறகு சீரியல் முகம் எனக்கூறி ரிஜெக்ட் செய்கிறார்கள் வாய்ப்பு போய்விட்டது.

Latha rao
Latha rao

என்று கவலையில்லை இந்த வாய்ப்பு இல்லை என்றால் இன்னொரு வாய்ப்பு ஆனால் கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் தான் வர சொல்லிவிட்டு சீரியல் முகம் என்று சொல்லி ரிஜெக்ட் செய்யும் போது ரொம்ப வேதனையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.