திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்ட ரசிகர்..! புகைப்படத்தை வெளியிட்டு சரியான பதிலடி கொடுத்த சீரியல் நடிகை கிருத்திகா.!

சீரியல் நடிகையிடம் ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட நிலையில் அந்த நடிகை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளது சமூக வளைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள் அந்தவகையில் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை பெறுவதற்காக பல நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் பட வாய்ப்பை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் சீரியல் நடிகைகளும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழில் முன்னணி தொலைக் காட்சியில் நடித்து வருபவர் தான் கீர்த்திகா அண்ணாமலை. இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சுந்தரி சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர். பல நடிகைகளும் சமூகவலைதளத்தில் தங்களுடைய ரசிகர்களுடன் உரையாடி  மகிழ்வார்கள் அந்த வகையில் சன் தொலைக் காட்சியில் நடித்து வரும் கீர்த்திகா அண்ணாமலை ரசிகர்களிடம் சமீபத்தில் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு சட்டென்று தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இவன் தான் என்னுடைய மகன் சகோதரா என பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்திகா. இந்த பதிவை பார்த்த பல ரசிகர்கள் கீர்த்திகா அவர்களை பாராட்டி  வருகிறார்கள்.

krithika annamalai

ஏனென்றால் பல நடிகைகள் ரசிகர்களின் கேள்விக்கு கோபப்பட்டு ஏதாவது வார்த்தையை விட்டு விடுவார்கள் ஆனால் இவர் ரசிகர்களின் மனம் கோணாத வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளார். கீர்த்திகா சில ஆண்டுகளுக்கு முன்பு சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஆறு வயதில் தற்பொழுது ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய புகைப்படத்தை தான் கீர்த்திகா வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

Exit mobile version