நீ நடிச்ச அழகா இருக்க, படிச்சா அதைவிட அழகா இருக்க கண்மணி புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.!

Kanmani Manoharan: பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி இளசுகளின் மத்தியில் தனக்கான மவுசை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் தான் நடிகை கண்மணி மனோகரன். பொதுவாக நடிகைகள் சோசியல் மீடியாவில் தங்களுடைய அழகான, ஹார்ட்டான புகைப்படங்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் விரைவில் மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு அந்தஸ்தை உருவாக்கி கொள்கிறார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை கண்மணி மனோகரன்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டரில் தனது அக்காவிற்கு வில்லியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக சிறப்பாக நடித்து வந்த இவர் பிறகு நல்ல பெண்ணாக மாறியது ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. தோழி ஒருவருடன் ஆடிஷனுக்கு போனபொழுது இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

KANMANI MANOHARAN 2

முதல் சீரியலில் வில்லி என்றாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றவர். அப்படி   தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

KANMANI MANOHARAN 1

இதில் வயதானவரை திருமணம் செய்துக் கொண்ட அமுதாவுக்கு தற்பொழுது படிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அவரது திருமண வாழ்க்கைக்கு ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. இவர் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு எப்படி படிக்கப் போகிறார் என்பதே அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் கதை.

KANMANI MANOHARAN

இன்ஸ்டாகிராமில் 5 லச்சத்துக்கும் அதிகமான பாலோசர்களை வைத்திருக்கும் கண்மணி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி  படிப்பது போன்று இவர் நடத்தி அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதனை வர்ணித்து வருகின்றனர்.

Exit mobile version