ஏன் இதுபோன்று செய்கிறீர்கள் என கேட்ட ரசிகருக்கு நச்சின்னு நெத்தியடி கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனனி.!

தற்பொழுது உள்ள வெள்ளித்திரை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் என்று அனைவரும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது, தங்களது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.  அந்த வகையில் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஜெனனியும் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசியுள்ளார். அதில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களை கூறியுள்ளார் அதனைப் பற்றி தற்போது பார்ப்போம்.

நடிகை ஜெனனி செம்பருத்தி சீரியல்க்கு முன்பு சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் செம்பருத்தி சீரியல் தான் இவருக்கு எக்கச்சக்கமான பாலோசர்களை பெற்று தந்தது.  இவ்வாறு செம்பருத்தி சீரியலில் மிகவும் நன்றாக நடித்து வந்தார் ஆனால் திடீரென்று இந்த சீரியலில் இருந்து இவர் நீக்கப்பட்டார்.

அதுகுறித்து கூட ஏன் என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று கதறி அழுத வீடியோ இணையதளத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் அதில் ரசிகர் ஒருவர் தற்பொழுது உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் அதிகப்படியான ப்ராடக்ட்ஸ்களை விளம்பரப்படுத்தி வருகிரார்கள் அது ஏன் என்று கேட்டுள்ளார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெனனி தொலைக்காட்சிகளில் பல விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

jenani ashok kumar
jenani ashok kumar

ஆனால் அதனை அவர்கள் உபயோகப்படுத்தி விட்டு அதன் பிறகு கூறுகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை இதனை அறியாத பலரும் அதனை வாங்கி உபயோக படுத்துகிறார்கள். எனவே நாங்கள் அதாவது எங்களது இன்ஸ்டாகிராமில் போடும் ஒவ்வொன்றையும் நாங்கள் உபயோகப்படுத்தி அது நல்ல ரிசல்ட் தந்தால் தான் உங்களிடம் பரிந்துரை செய்வோம் என்று கூறியுள்ளார். இது விளம்பரம் நோக்கம் அல்ல  மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்துதான் கூறுகிறோம் என்று கூறியுள்ளார் ஜெனனி.

Leave a Comment