என் அண்ணனின் பிணத்தை காசு கொடுத்தால்தான் கொடுப்பேன் என கூறினார்கள்.! கண்ணீருடன் சீரியல் நடிகை ஜனனி வெளியிட்ட வீடியோ.!

கடந்த சில நாட்களாகவே நாட்டையே உலுக்கி வருவது சாத்தான்குளம் பிரச்சனைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகத்தையே புரட்டிப் போட்டு வருகிறது, காவல்துறையினர் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு உயிர் இறந்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர் மற்றும் நடிகைகள் என தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் மரணத்திற்கு நியாயம் கிடைத்தே ஆகவேண்டும் என சமூக வளைதளத்தில் பல்வேறு கோரிக்கைகள் இருந்து வருகிறது.

அதேபோல் சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே #justiceforjayarajandbennicks என்ற ஹேஷ் டேக்  தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நான் பொதுவாக டிவி பார்ப்பது கிடையாது ஆனால் இன்று காலை தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் வந்தேன் இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது எனக்கு அறியாமலேயே அழுகை வருகிறது, ஒரு மிருகம் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும் அதுகூட பசித்தால் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும் ஆனால் ஒரு மனிதனாக இருந்து இன்னொரு மனிதனை கொல்ல எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது, நான் இவ்வளவு அழுவதற்கு காரணம் இதுபோன்ற சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் நடந்ததுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு இதே போல் என்னுடைய அண்ணனையும் இழந்தேன் அதிலிருந்து எனக்கு போலீசை பிடிக்காமல் போய்விட்டது என்னுடைய அண்ணன் பிணத்தைக் கூட பணம் கொடுத்தால் தான் கொடுப்பேன் என கூறினார்கள் அப்பொழுது நான் மிகச் சிறிய பெண்ணாக இருந்தேன் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது இதற்கு நாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

https://youtu.be/7-7EerFHSx0

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment