சீரியல் நடிகை தர்ஷா குப்தா சீரியலில் நடிப்பதற்கு முன்பு என்ன வேலை பார்த்தார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பொதுவாக சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்,நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வெறும் 500 ரூபாய்க்கு வேலை செய்து வந்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தவர்கள் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் லட்சங்கலில் சம்பளத்தை விட்டுவிட்டு சினிமாவில் நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை தர்ஷா குப்டா இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் மிகவும் குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் சோசியல் மீடியாவில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார்.

இதன் மூலம் பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் இவர் நினைத்ததுபோல வாய்ப்புகள் வரத் தொடங்கியது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பல நடுவர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவர் தற்பொழுது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது தர்ஷா குப்தா கொரோனாவின் இரண்டாவுது அலை காரணமாக பசியாலும் பட்டினியாலும் தவித்து வரும் சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார்.

dharsha gupta 01
dharsha gupta 01

இந்நிலையில் இவர் சினிமாவிற்க்கு அறிமுகமாவதற்கு முன்பு என்ன வேலை பார்த்துள்ளார் என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளத. இவர் தனது சொந்த ஊரிலிருந்து தனது தோழியை பார்க்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்துள்ளார்.  அதன்பிறகு ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். சினிமாவில் இவர் நடிப்பதற்கு இவருடைய அம்மாதான் பக்கபலமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment