யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த நடிகையா இது.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது சின்னத்திரையில் உள்ள நடிகைகள் போட்டி போட்டு கொண்டு நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்து வரும்  சைத்ரா ரெட்டி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் தன் வாழ்க்கையை ஒரு மாடலிங்காக ஆரம்பித்து  தற்பொழுது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார். இந்த நிலையில் இவர் முதலில் தெலுங்கு சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியலில் சிவானி என்ற பெயரினால் பிரபலம் அடைந்துள்ளார்.

இதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதற்கு அடுத்ததாக தான் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் யாரடி மோகினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மட்டுமல்ல டான்ஸிலும் மிக சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜீ தமிழில் வில்லியாக நடித்ததன் மூலம் விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு  உத்தரவில் வீட்டிலே இருந்த சைத்ரா ரெட்டி தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

chaithara reddy
chaithara reddy
chaithara reddy
chaithara reddy
chaithara reddy
chaithara reddy
reddy
reddy

Leave a Comment