பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகுவது பற்றி முதன் முறையாக வாய் திறந்த கதிர்.!

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது உள்ள மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவிதான் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சீரியல்கலாக இருந்தாலும் எல்லாவற்றையும் ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் சுவாரசியமாக பலவற்றை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது TRP-யில் தொடர்ந்து முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் நாடகத்திலிருந்து முன்னணி நடிகர் ஒருவர் விலங்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிய பிரபலமடைந்தவர் குமரன்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவையும் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்கள் என்று அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது.

இதனைத்தொடர்ந்து கதிர் மற்றும் முல்லை கேரக்டர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் சித்ராவின் மறைவிற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான காவியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது  தனம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது தான் கர்ப்பமாக உள்ளார் இந்த எபிசோடு தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் பிளாஷ்பேக் கதைகள் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே ஃப்ளாஷ்பேக் கதைக்காக சில குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாக உள்ளார்கள். இந்நிலையில் குமரன் போட்ட ஒரு பதிவு தற்பொழுது பல வதந்திகள் பரவி வருகிறது. அதாவது குமரன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழா விஜய் டிவியில் ஒளிபரப்பானது.அவ்வபொழுது குமரனுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் குமரன் தனக்கு விருது கிடைக்கவில்லை என்று சிலர் கூறியதாகவும், நான் கொடுத்த வேலையை சரியாக செய்கிறேன் விருது கிடைக்காததை பற்றி யோசிக்க வேண்டாம் என  பதிவு ஒன்றை போட்டார்.

இந்தப் பதிவை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இவர் பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகுகிறார் என்று கூறிவருகிறார்கள் அது முற்றிலும் வதந்தி.

Leave a Comment