தனது தாத்தா போலவே காமெடியில் பின்னி பெடல் எடுக்கும் செந்திலின் பேத்தி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யார் என்றால் நடிகர் செந்தில் தான். இவர் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரது காமெடியை பார்த்தால் நம் கவலையெல்லாம் மறந்து போகும். அந்த அளவிற்கு இவர்கள்  காமெடிகள் அவ்ளோ அருமையாக இருக்கும்.மேலும் செந்தில்  நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.  இவர் முதன்முதலில் மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

செந்தில்  சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வேலையில்லாமல் மதுபானக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஒரு சில கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அவரது நடிப்பை வெளிக்காட்டி தான் தமிழ் சினிமாவிற்கு வந்தடைந்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் முத்து, அருணாச்சலம், ஜெயம், படையப்பா உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திரா என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். அவரது மூத்த மகனான மணிகண்ட பிரபுவின் மகள் தான் மிருதி. இவர் தற்போது நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி இவர்கள் இருவரும் நடித்த புலி காமெடி காட்சி ஒன்றை செந்திலின் பேத்தி மிருதி பேசிய வீடியோ காட்சி  சமூக வலைதளத்தில் மிக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைட்ஸ் காலையும் கமல் களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version