10 வது திருமண நாளை கொண்டாடிய செந்தில் ராஜலக்ஷ்மி.! வைரலாகும் புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம்  அறிமுகமானவர் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது திருமண புகைப்படத்தை செந்தில் கணேஷ் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடையில்  பல பாடல்களைப் பாடி உள்ளார்கள். ஆனால் ராஜலட்சுமி மட்டும் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். மேலும் செந்தில் கணேஷ் மட்டும் விடாமுயற்சியால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை தட்டி பிடித்தார்.

அதன்பிறகு இவர்களுக்கு நிறைய திரைப்படங்களில் பாட வாய்ப்பு குவிந்து வந்தது. அந்த நிலையில்தான் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் ‘என்ன மச்சான் சொல்லு புள்ள’ என்ற பாடலை பாடி  இருப்பார்கள் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

மேலும் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்  மற்றும் ரஷ்மிகா மந்தனா இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. அந்த  திரைப்படத்தில் செந்தில் ராஜலட்சுமி  ‘ஐயா சாமி அய்யா சாமி’ என்ற பாடலை பாடியிருப்பார் இந்த திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

அதுமட்டுமில்லாமல் செந்தில்ராஜலட்சுமி சில திரைப்படங்களில் கூட நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவர்கள் இருவரும் ஒரு ஸ்டூடியோவை ஆரம்பித்து சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இவர்களுக்கு கல்யாண நாளை முன்னிட்டு செந்தில் சோஷியல் மீடியாவில் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.இவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

senthil
senthil
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment