குடிக்கும்போது உருவான நட்பு, சூப்பர் ஸ்டார் ரஜினியையே அதட்டிய செந்தாமரை – சுவாரசியமான தகவலை கூறிய மனைவி

மறைந்த நடிகர் செந்தாமரை மற்றும் ரஜினிகாந்த் இடையே ஏற்பட்ட நட்பு எப்படி என்று செந்தாமரையின் மனைவி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் செந்தாமரை அவர்கள் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இதுவரைக்கும் நடிகர் செந்தாமரை அவர்கள் 50 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக நடிகர் செந்தாமரை முக்கால்வாசி திரைப்படங்களில் வில்லனாக நடித்து பலரையும் மிரட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் செந்தாமரை அவர்கள் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிக்கு இணையான நடிகராக இருந்தார் அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஒரு நாடகத்தில் நடிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் செந்தாமரை அவர்கள் ஒரு நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மேடையில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். இவருடைய மறைவு பல ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரைப்போல ஒரு வில்லன் தமிழ் சினிமாவில் தேடினால் கூட கிடைக்காது என்று கூறி வந்தார்கள்.

வில்லனுக்கு ஏத்த முகபாவனை அனைத்தும் செந்தாமரைக்கு இருந்தது இப்படி இருக்கும் நடிகர் செந்தாமரை தனது 57 வயதில் மறைந்தது நாம் அனைவருக்கும் சோகம் அளிக்கிறது. இதற்கு இடையில் நடிகை கௌசல்யாவை செந்தாமரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கௌசல்யாவும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது சீரியளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கௌசல்யா மறைந்த தன்னுடைய கணவர் செந்தாமரை அவர்களைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கும் செந்தாமரைக்கும் மது அருந்தும் போது தான் நட்பு ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த போது சில பிரச்சனைகள் வந்தது அப்போது நடிகர் ரஜினி அவர்கள் 25,000 கொடுத்து உதவி செய்தார். அதன் பிறகு வீட்டு பிரச்சனையின் போது செந்தாமரை ரஜினியை கடுமையாக கண்டித்து இருக்கிறார் இதை பார்த்த ஒரு இயக்குனர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று கௌசல்யா கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment